குஜராத்தில் காங்‌கிரஸ் கை ஓங்கியுள்ளது: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

குஜராத்தில் காங்‌கிரஸ் கை ஓங்கியுள்ளது: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
குஜராத்தில் காங்‌கிரஸ் கை ஓங்கியுள்ளது: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

குஜராத்தில் காங்கிரஸின் கை ஓங்கி இருப்பதாகவும், ராகுல் காந்தியின் அரசியல் பயணத்துக்கான சிறந்த தொடக்கமாகவும் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதாவின் கோட்டையாக உள்ள குஜராத்தில் இந்த முறை கூடுதல் இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது என சுட்டிக் காட்டியுள்ள மூத்த தலைவர் கமல்நாத், இதுதான் ராகுல் காந்தியின் அரசியல் பயணத்துக்கான சிறந்த தொடக்கமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். இலக்கை அடைய முடியாவிட்டாலு‌ம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தனது பயணத்தை சிறப்பாக தொடங்கி இரு‌க்கிறது என சசி தரூர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குஜராத்தில் காங்கிரஸின் பலம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கும் ரேணுகா சவுத்ரி, ‌இந்த மாற்றம் ராகுல் காந்தியால் நிகழ்ந்திருக்கிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com