பஞ்சாப் இடைத்தேர்தலில் காங். அபார வெற்றி: பாஜக தொகுதியை கைப்பற்றியது

பஞ்சாப் இடைத்தேர்தலில் காங். அபார வெற்றி: பாஜக தொகுதியை கைப்பற்றியது
பஞ்சாப் இடைத்தேர்தலில் காங். அபார வெற்றி: பாஜக தொகுதியை கைப்பற்றியது

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பியுமான வினோத் கன்னா மறைவை அடுத்து குர்தாஸ்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு இதே தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 1.36 லட்சம் வாக்குகல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், பாரதிய ஜனதா வசம் இருந்த மக்களவை தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com