கோவை: கைது செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் விடுவிப்பு

கோவை: கைது செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் விடுவிப்பு
கோவை: கைது செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் விடுவிப்பு

கோவையில் நேற்று 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துவதுடன் வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்ட திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை கலைந்து செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தியும் அவர்கள் மறுத்தனர்.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். நேற்றிரவு அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலை ஒட்டி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com