கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி

கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி

கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேயம் மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதர கட்சிகளுடனான தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது. காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிக்கும் மன சங்கடம் இருக்கத்தான் செய்யும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com