இளைஞர்களுடன் இறகுப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!

இளைஞர்களுடன் இறகுப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!

இளைஞர்களுடன் இறகுப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!
Published on

முதலமைச்சர் எடப்பா‌டி பழனி‌சாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவைத் திறந்து வைத்தார். அப்போது இளைஞர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இறகுப்பந்தும் விளையாடி மகிழ்ந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள வெள்ளரிவெள்ளி என்ற ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. அதனை இளைஞர்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் முதலமைச்சர் பழனிசாமி உற்சாகமாக இறகுப்பந்தும் விளையாடினார். அது மட்டுமில்லாமல் இளைஞர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடவும் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com