ஏப்.2-ல் சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

ஏப்.2-ல் சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
ஏப்.2-ல் சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னை வருகிறார்.

இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் தமிழகம் வரும் அரோரா, சென்னையில் 2 நாட்கள் தங்கி முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார்.

ஏப்ரல் 3-ஆம் தேதி காலையில், தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர், டிஜிபி, வருமான வரித்துறை இயக்குனர் உள்ளிட்டோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com