“மனோரமா ஆச்சியைதான் சொன்னேன்”-  செல்லூர்ராஜூ விளக்கம்

“மனோரமா ஆச்சியைதான் சொன்னேன்”- செல்லூர்ராஜூ விளக்கம்

“மனோரமா ஆச்சியைதான் சொன்னேன்”- செல்லூர்ராஜூ விளக்கம்
Published on

தமிழக அமைச்சர் ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் பேசியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

நேற்று மதுரையில் செய்தியாளார்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் “ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது; காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்” என்று கூறி இருந்தார்.அமைச்சரின் இந்தப் பேச்சு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறி அவரை கண்டிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அனைத்து செட்டியார்கள் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆலங்குடி, செட்டிகுளம், சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று கோஷமிட்டு ஆலங்குடி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் புதிய தலைமுறையின் ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூவிடம் இது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர், “ நான் காரைக்குடி சமூகத்தைச் சார்ந்த ஆச்சிகளை சொல்லவில்லை.  ரஜினியுடன் சேர்ந்த நடித்த மனோரமா ஆச்சியைதான் கிண்டல்லாக பேசினேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com