தேய்த்தாலும் தேயாது தெற்கு: கமல்

தேய்த்தாலும் தேயாது தெற்கு: கமல்

தேய்த்தாலும் தேயாது தெற்கு: கமல்
Published on

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தேய்த்தாலும் தேயாது தெற்கு என்று கூறியுள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள், நகர வடிவமைப்பு, திரைப்படம், உணவு முறை, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை ‘படைப்பாக்க நகரங்கள்’ (Creative Cities) என்று பட்டியலிட்டு சிறப்புச் செய்து வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.

இந்நிலையில், யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். “சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ (@unesco) அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு” என்று கமல் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com