சென்னை: பறக்கும் படை வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10லட்சம் பறிமுதல்

சென்னை: பறக்கும் படை வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10லட்சம் பறிமுதல்

சென்னை: பறக்கும் படை வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10லட்சம் பறிமுதல்
Published on

ஆவடியில் ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ. 10லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 26-ம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையில் போலீசார் ஆவடி, பருத்திப்பட்டு, எம்.ஜி.ஆர் நகர், கோலடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக, அம்பத்தூரை அடுத்துள்ள பாடி, தேவர் நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் ராஜ்குமார் (27) என்பவர் காரில் வந்து உள்ளார். அவரது காரை வழிமறித்த பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, காரில் ரூ. 10லட்சம் ரொக்கப்பணம் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லை.


இதனையடுத்து, அதிகாரிகள் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து அதனை ஆவடி தொகுதி தேர்தல் அதிகாரி பரமேஸ்வரி மூலமாக ஆவடி தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, அவர் அந்த பணத்தை ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும், அதிகாரிகள் ராஜ்குமாரிடம் பணத்துக்கு உரிய ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com