தேர்தலில் வெற்றியா தோல்வியா? கிளி ஜோசியம் பார்த்த அதிமுக வேட்பாளர்

தேர்தலில் வெற்றியா தோல்வியா? கிளி ஜோசியம் பார்த்த அதிமுக வேட்பாளர்
தேர்தலில் வெற்றியா தோல்வியா? கிளி ஜோசியம் பார்த்த அதிமுக வேட்பாளர்

சென்னை மதுரவாயலில் அதிமுக வேட்பாளரின் வெற்றியை கணித்த கிளி ஜோசியம். சோழி உருட்டியும் வெற்றி என தெரிந்ததால் அதிமுக வேட்பாளர் உற்சாகமடைந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஓர் அங்கமாக சென்னை மதுரவாயல் அடுத்த ராமாபுரம் 155வது வார்டில் அதிமுக வேட்பாளராக ராஜ்குமார் என்பவர் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், இன்று 155 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட அம்மன் நகர், செல்லியம்மன் நகர், கானாத்தம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், வேட்பாளர் ராஜ்குமார் செல்லியம்மன் நகர் அம்மன் கோயில் அருகே கிளி ஜோசியம் பார்த்தார். அப்போது கிளி அவருக்கு முருக குடும்பத்தைச் சேர்ந்த படத்தை எடுத்து அவர் வெற்றி பெற்றதாக கூறியது. மேலும் சோழியை உருட்டி பார்க்கலாம் என வேட்பாளர் ராஜ்குமார் சோழியை உருட்டினார். அப்போது சோழி மூன்று கண்திறந்து காண்பித்து வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்தது.

கிளி ஜோசியம் மற்றும் சோழி இரண்டிலும் வெற்றி பெற்றதாக காண்பித்ததால் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் மகிழ்ச்சி அடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com