பொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு

பொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு

பொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு
Published on

கன்னியாகுமரி பா‌ஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர். எவ்வித முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டதாக, தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com