தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனன், திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேற்று தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்தனர். டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவரின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். ஏராளமான ஆதரவாளர்கள், அண்ணா உருவம் இல்லாத கருப்பு, வெள்ளை,
சிவப்பு கொடியுடன் டிடிவி தினகரனை அழைத்து வந்தனர்.

இதனிடையே, தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது அவரின் ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இததொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரி மயில்சாமி தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்தொடர்ச்சியாக தினகரன் ஆதரவாளர்கள் மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com