ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ விலகல் !

ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ விலகல் !

ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ விலகல் !
Published on

காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியது "பிராவோ இனி நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார். காயம் காரணமாக பிராவோ அவதிப்படுவதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவார். ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் சிஎஸ்கேவுக்கு முக்கியமான வீரர்கள்" என்றார்.

மேலும் "இருவரையும் சிஎஸ்கே மிஸ் செய்கிறது. ஆனால் ஒரு வீரரின் தனிப்பட்ட முடிவை நாம் மதிக்க வேண்டும். அதில் மூத்த வீரர், இளம் வீரர் என்று பாகுபாடு காட்டக் கூடாது" என்றார் காசி விஸ்வநாதன்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com