இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை பாயல் கோஷ்!

இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை பாயல் கோஷ்!
இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை பாயல் கோஷ்!

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை பாயல் கோஷ் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதன்பிறகு, சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ’அனுராக் காஷ்யப் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அப்போது அவரிடமிருந்து தப்பித்து வந்துவிட்டேன். அதன்பிறகு பலமுறை என்னை அவரது வீட்டிற்கு வரச்சொல்லி மெசேஜ் அனுப்பினார். ஆனால், அதற்கான ஆதரங்கள் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்தார்.

பாயல் கோஷின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும்விதமாக அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக, அவரது முன்னாள் மனைவி, நடிகை டாப்ஸி, ஹீமா குரோஷி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர். ஆனால், அவருக்கு எதிர்ப்பாக கைது செய்யவேண்டும் என்று கங்கனா ரனாவத் பதிவிட்டிருந்தார்.

அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை பாயல் கோஷ் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மகளிர் அணி துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com