சென்னை: தாறுமாறாக காரை ஓட்டிய சிறுவன்; கடைக்குள் புகுந்து ஒருவருக்கு கால் முறிவு

சென்னை: தாறுமாறாக காரை ஓட்டிய சிறுவன்; கடைக்குள் புகுந்து ஒருவருக்கு கால் முறிவு
சென்னை: தாறுமாறாக காரை ஓட்டிய சிறுவன்; கடைக்குள் புகுந்து ஒருவருக்கு கால் முறிவு

பூந்தமல்லி அருகே சிறுவன் ஒட்டிய கார் கடைக்குள் புகுந்ததில் ஒருவருக்கு இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கடை நடத்தி வருபவர் பெரியசாமி. இவரது கடைக்கு அருகில் உள்ள குளிர்பான கடையில் வேலை செய்து வந்த சிறுவன் கடைக்கு சொந்தமான காரை எடுத்து ஓட்டி வந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென இனிப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை இடித்து கொண்டு கடைக்குள் புகுந்தது.

இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் உடைந்து சிதறியது. மேலும், பெரியசாமியின் இரண்டு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பெரியசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் காரை ஓட்டி கடைக்குள் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com