மணிப்பூர் தேர்தல்: வாக்குப்பதிவின் போது வன்முறை - சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்

மணிப்பூர் தேர்தல்: வாக்குப்பதிவின் போது வன்முறை - சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்

மணிப்பூர் தேர்தல்: வாக்குப்பதிவின் போது வன்முறை - சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்

மணிப்பூரில் இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது நிகழ்ந்த வன்முறையில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் பாஜக நிர்வாகியின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுவீசப்பட்டது.

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. கடந்த மாதம் 28 ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், எஞ்சிய 22 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மாலையுடன் நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோயி சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்களது வாக்கை செலுத்தினர். வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் மிகுந்த ஆவலுடன் வாக்களித்தனர்.

இதற்கிடையே வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. பாரதிய ஜனதா பிரமுகரான அமுபா சிங் என்பவர், இம்பாலில் உள்ள காங்கிரஸ் தொண்டரின் வீட்டிற்கு சென்று வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியால் சுட்டதில் அமுபா சிங் உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த பாரதிய ஜனதா தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு வன்முறை ஏற்பட்டது. அதேபோல, இம்பால் அருகே உள்ள லாம்பெல் என்ற பகுதியில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட பிஜாய் என்பவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com