”பாஜக ஐடி பிரிவு முரட்டுத்தனமாகிவிட்டது” - சுப்ரமணியன் சுவாமி காட்டம்

”பாஜக ஐடி பிரிவு முரட்டுத்தனமாகிவிட்டது” - சுப்ரமணியன் சுவாமி காட்டம்
”பாஜக ஐடி பிரிவு முரட்டுத்தனமாகிவிட்டது” - சுப்ரமணியன் சுவாமி காட்டம்

பாஜக உறுப்பினர்கள் சிலர் என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக, போலி ஐடி ட்வீட்களை வெளியிடுகிறார்கள் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு (ஐ.டி) முரட்டுத்தனமாகிவிட்டது. அதன் உறுப்பினர்கள் சிலர் என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த போலி ஐடி ட்வீட்களை வெளியிடுகிறார்கள். இதனால் கோபமடைந்த  என்னை  பின் தொடர்பவர்களும் பதிலடியாக மீண்டும் தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டால், கட்சியின் முரட்டுத்தனமான ’ஐடி’களின் செயல்களுக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது என்பது போல அவர்களின் செயலுக்கும் என்னால் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com