மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் தொண்டர்கள் மோதல்
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் கார் உடைக்கப்பட்டது.

மக்க‌ளவை தேர்தல்,‌ இதுவரை ‌302‌ தொகுதிகளில் 3‌ கட்ட‌ங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது‌. இந்‌நிலையில் ‌4ஆம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதி‌களில் நடைபெறுகிறது. 

இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடம் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 3வது கட்டமாக 17 தொகுதிகளிலும் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ‌தலா‌ 13 தொகுதிகளி‌லும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்திய ‌பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளிலும்‌ பீகாரில் 5 தொகுதிகளிலும் ஜா‌ர்க்க‌ண்ட்டில் 3 தொகுதி‌களிலும்மேற்கு வங்கத்தில் ‌8 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

இவை தவிர காஷ்மீர் ‌மா‌நிலத்தி‌ல் அனந்த் நாக் தொகுதியில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஒரு தொகுதியில் 3 கட்டமா‌க தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 125-ல் திரிணாமுல் காங்கிரஸ்  தொண்டர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்த போது, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென உள்ளே நுழைந்ததால், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர், அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். 

அதே தொகுதியில் வாக்குச்சாவடி எண் 199-க்கு பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வந்தார். அப்போது அவர் கார் அடித்து நொறுக்கப்பட்டது. 169, 113 மற்றும் 218 ஆகிய வாக்குச் சாவடிகளில் திரிணாமுல் காங்கிரஸ்- பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com