”ஓடும் ரயிலில் செல்போன் திருடனுக்கு பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை” - வைரல் வீடியோ பின்னணி!

”ஓடும் ரயிலில் செல்போன் திருடனுக்கு பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை” - வைரல் வீடியோ பின்னணி!

”ஓடும் ரயிலில் செல்போன் திருடனுக்கு பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை” - வைரல் வீடியோ பின்னணி!
Published on

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிக்கும் போது அந்த திருடர்கள் சிக்குவது தொடர்பான பல வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் செய்திகள் உலாவருவது வழக்கம். அந்த வகையில் பீகாரில் ஓடும் ரயில் நடந்த போன் பறிப்பு சம்பவம் குறித்த வீடியோதான் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

அதன்படி பீகாரின் பெகுசராய் முதல் ககாரியா வரை சென்ற ரயில் சாஹேப்பூர் கமல் நிலையத்தில் நின்றபோது பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். திருடனை பிடித்த நேரம் பார்த்தும் ரயிலும் கிளம்பியிருக்கிறது.

இதனால் பீதியில் ஆழ்ந்த அந்த திருடன் தன் கையை விட்டுவிட வேண்டாம் என கெஞ்சியிருக்கிறார். இப்படியாக கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அந்த திருடன் ஓடும் ரயிலில் தொங்கியவாரு ககாரியா வரை அழைத்து வரப்பட்டிருக்கிறார். ககாரியா வந்ததும் அங்கு போலீசிடம் பயணிகள் திருடனை ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஓடும் ரயிலில் தொங்கியவாரு செல்போன் திருடன் கதறிய வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com