தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நம்பிக்கை தெரிவித்தார். 

கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி என்று தனது உரையைத் தொடங்கிய நிதிஷ்குமார், சமூகநீதிக்காக அரும்பாடுபட்ட தலைவராக கருணாநிதி திகழ்வதாய் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் பணியாற்றி புதிய அத்தியாயம் படைத்த கருணாநிதி, இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்றும் நிதிஷ் குறிப்பிட்டார். கருணாநிதியின் அத்தியாயத்தை யாராலும் தகர்த்தெறிய முடியாது என்று அவர் கூறினார். தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்று பேசிய நிதிஷ், அதற்குத் தேவையான அனைத்து அரசியல் அனுபவமும் ஸ்டாலின் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பின் கோபாலபுரம் இல்லம் சென்ற நிதிஷ், கருணாநிதியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com