வாக்காளர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் பவானிசாகர் பேரூராட்சி வாக்குச்சாவடிகள்

வாக்காளர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் பவானிசாகர் பேரூராட்சி வாக்குச்சாவடிகள்
வாக்காளர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் பவானிசாகர் பேரூராட்சி வாக்குச்சாவடிகள்

பவானிசாகர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கி ஒருமணி நேரமாகியும் வாக்காளர்கள் வராததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், வாக்காளர்கள் வராததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒருசில வாக்காளர்கள் மட்டுமே அவ்வப்போது வந்து வாக்களித்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக மிகவும் மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com