தமிழகத்தின் ஆளுநர் அக்.6-ம் தேதி பதவியேற்பு

தமிழகத்தின் ஆளுநர் அக்.6-ம் தேதி பதவியேற்பு

தமிழகத்தின் ஆளுநர் அக்.6-ம் தேதி பதவியேற்பு
Published on

தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், வரும் அக்டோபர் 6ம் தேதி பதவியேற்கிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பன்வாரிலால் அக்டோபர் 5ம் தேதி தமிழகம் வருகிறார். அக்டோபர் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவரான பன்வாரிலால், மேகலயா ஆளுநராக தற்போது உள்ளார். தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில் புதிய ஆளுநராக பதவியேற்கும் பன்வாரிலாலுக்கு பல்வேறு சவால்கள் இருப்பதாக அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com