”இதே சீனியர் டீம்மை வைத்து சாதிப்பார் தோனி" அடித்து சொல்லும் நெஹ்ரா !

”இதே சீனியர் டீம்மை வைத்து சாதிப்பார் தோனி" அடித்து சொல்லும் நெஹ்ரா !
”இதே சீனியர் டீம்மை வைத்து சாதிப்பார் தோனி" அடித்து சொல்லும் நெஹ்ரா  !

சிஎஸ்கே அணியில் அடுத்தாண்டு மாற்றம் இருக்காது, இதே அணியுடன் தோனி சாதிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

எப்போதும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறும் சென்னை அணி இந்தாண்டு தகுதிப் பெறாமல் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை 3 முறை சாம்பியன், 6 முறை 2-வது இடம் என சாதனைப் படைத்த அணி, இந்தாண்டு வெளியேறுவது ரசிகர்களுக்கு பெரும் சோகம்தான். இந்தாண்டு சென்னை அணி மீதான விமர்சனங்களும் அதிகம்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசிஷ் நெஹ்ரா " தோனி என்பவர் மனதளவில் மிகவும் வலிமையான வீரர். அவருக்கு அணியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியும். அவருக்கு அணியை நிர்வகிப்பது பெரிய பணியாக இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும், நீங்கள் தகுதி பெறாவிட்டால் அது உங்களைப் பாதிக்கும். இது முதல் முறைதானே. வயது என்பது பிரச்னையில்லை. ஐபிஎல் தொடரில் நான் 39 வயது வரை விளையாடினேன். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். நானே 39 வயது வரை விளையாட முடிந்தது. இன்னும் கூட நீண்டகாலம் விளையாடி இருக்க முடியும்" என்றார் நெஹ்ரா.

மேலும் பேசிய நெஹ்ரா " சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு ஷேன் வாட்ஸன் கூட இருப்பார் என நினைக்கிறேன். ஆதலால், பெரிய அளவுக்கு அணியில் மாற்றம் ஏதும் சிஎஸ்கே நிர்வாகம் செய்யாது என்றே நம்புகிறேன். நாம் ஐபிஎல் தொடரைப் பார்த்தவரை, சிஎஸ்கே அணியில் வீரர்கள் 30 முதல் 35 வயதுள்ளவர்கள் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு சீசனை வைத்து எடைபோட முடியாது. அடுத்த சீசனில் இதே பழைய சிஎஸ்கே திரும்ப வருவார்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com