டாஸ்மாக் பொதுமேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

டாஸ்மாக் பொதுமேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை
டாஸ்மாக் பொதுமேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை


சேலம் டாஸ்மாக் பொதுமேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இதுவரை நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


சேலம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக அம்பாயிரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய அலுவலகமும் அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் தீபாவளி மாமூல் வசூலிப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார் டாஸ்மாக் குடோனுக்குச் சென்று அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.


இந்த சோதனையின் போது பணம் தொடர்பாக பணியாளர்கள் உள்பட அனைவரிடமும் கணக்கு கேட்கப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com