மணிசங்கரை நீக்க வேண்டும்: காங்கிரசுக்கு முலாயம் சிங் கோரிக்கை

மணிசங்கரை நீக்க வேண்டும்: காங்கிரசுக்கு முலாயம் சிங் கோரிக்கை
மணிசங்கரை நீக்க வேண்டும்: காங்கிரசுக்கு முலாயம் சிங் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியை இழிவாக சித்தரிக்கும் வார்த்தையைப் பயன்படுத்திய மணிசங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சியைவிட்டே நீக்க வேண்டு என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் இட்டாவா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் குறித்து காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் பயன்படுத்திய சொல் முற்றிலும் தவறானது என்றும், அதற்காக இடைநீக்கம் செய்தால் போதாது, கட்சியைவிட்டே நீக்க வேண்டும் என்று கூறினார். 

நேர்மறை அரசியல் காலாவதியாகி விட்டதாக கூறிய முலாயம் சிங், புழுதிவாரி தூற்றும் அரசியல்தான் தற்போது இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com