செப். 19ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

செப். 19ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
செப். 19ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், நேற்றும், இன்றும் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களாக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலாளர் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதேபோல், தலைமை கழக நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் அறிவிப்பு வெளியானது. அதிமுக சட்ட ஆலோசகராக பி.ஹெச்.பாண்டியனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர்களாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்திரம், முன்னாள் எம்.எல்.ஏ முத்துலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com