துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: கே.பி.முனுசாமி

துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: கே.பி.முனுசாமி

துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: கே.பி.முனுசாமி
Published on

அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி “ அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது. அதனை தமிழ்நாடு பாஜக தலைவர் முருகனே கூறிவிட்டார். அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகச் சென்ற துரைசாமிக்கு பதில் சொல்ல அவசியமில்லை” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி அனுசரித்து போகிறதோ அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்றும், அந்தக் கூட்டணி பாஜக தலைமையில்தான் அமையும் என்று வி.பி.துரைசாமி கூறியிருந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com