15 மனைவிகள்.. 107 குழந்தைகள்.. சுகப்போகமாக வாழும் கென்யா மனிதர்.. - இது ஒரு சுவாரஸ்ய கதை

15 மனைவிகள்.. 107 குழந்தைகள்.. சுகப்போகமாக வாழும் கென்யா மனிதர்.. - இது ஒரு சுவாரஸ்ய கதை
15 மனைவிகள்.. 107 குழந்தைகள்.. சுகப்போகமாக வாழும் கென்யா மனிதர்.. - இது ஒரு சுவாரஸ்ய கதை

வடிவேலுவின் தெனாலிராமன் படத்தில் வரும் மன்னர் கதாப்பாத்திரத்தை போலவே கென்யா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 15 மனைவிகளுடன், 107 பிள்ளைகளை பெற்று சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்.

வடக்கு கென்யாவைச் சேர்ந்த டேவிட் சகாயோ கலுஹானா என்ற 61 வயதானவருக்குதான் 15 மனைவிகள் இருக்கிறார். பல நூறு மனைவிகளை கொண்டிருந்ததாக கூறப்படும் இஸ்ரேல் மன்னர் சாலமனால் ஈர்க்கப்பட்டதாக டேவிட் கூறியிருக்கிறார்.

கிங் சாலமனுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவர் இல்லை என்றும் எண்ணுவதாகவும், மேலும் பல பெண்களை திருமணம் செய்து வாழ்வதில் தனக்கு எந்த அசவுகரியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள டேவிட், “என்னை போன்ற அறிவாளியை ஒரு பெண்ணால் மட்டும் கவனிக்க முடியாது. என்னுடைய IQ அளவை சமாளிக்க கண்டிப்பாக ஒரு பெண்ணால் முடியாது. அதனால்தான் நிறைய பெண்களை திருமணம் செய்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

15 மனைவிகளையும் அசாத்தியமாக கையாள்வதால் அவர்களுக்குள் எந்த சண்டையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறாராம் டேவிட். தன்னுடைய மனைவிகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தாலும் அதில் எந்த பிரச்னையும் ஏற்படாது எனவும் டேவிட் கூறுகிறார்.

டேவிட்டின் மனைவிகளில் ஒருவரான ஜெசிக்கா பேசும் போது, “என் கணவர் எத்தனை பெண்களை திருமணம் செய்துக் கொண்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் மிகவும் பொறுப்பான மனிதர். எந்த விஷயத்தையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்தே முடிவெடுப்பார். நாங்கள் 1998ம் ஆண்டே திருமணம் செய்துக் கொண்டோம்” என்றுள்ளார்.

ஜெசிக்காவை தொடர்ந்து பேசிய டேவிட்டின் இன்னொரு மனைவி ரோஸ், “நாங்கள் நல்லபடியாக வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டிற்கும் 15 குழந்தைகள் உள்ளனர். தொடக்க காலத்தில் எங்களுக்குள் பொறாமை குணங்கள் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவையெல்லாம் தற்போது இல்லை” என பெருமையாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com