செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்

செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்
செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்

சேலத்தில் அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தாக்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் திமுகவில் இணைந்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிந்தாமணியூரில் அதிமுக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலையுடன் சமீபத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் என்பவர், அன்புமணியை பார்த்து சில கேள்விகளை கேட்டார். 

        
இதை தடுத்து பார்த்த செம்மலை எம்எல்ஏ, பொறுமை இழந்து, அந்த அதிமுக நிர்வாகியை கன்னத்தில் பளீர்... பளீர் என அடித்தார். பின்னர், அங்கிருந்து செந்தில்குமார் அப்புறப்படுத்தப்பட்டார். ஆனால்,செம்மலை தங்கராஜை அடித்த காட்சி வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செம்மலை எம்.எல்.ஏவிடம் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி செந்தில்குமார் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் தொண்டர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் திமுகவில் இணைந்ததாக அவர் கூறினார். திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் செந்தில்குமார் உட்பட சுமார் 500 பேர் கட்சியில் இணைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com