மக்கள் கூடுவதால் தான் நெடுஞ்சாலையை மறித்து கூட்டம் போடுறோம் - அதிமுக எம்எல்ஏ

மக்கள் கூடுவதால் தான் நெடுஞ்சாலையை மறித்து கூட்டம் போடுறோம் - அதிமுக எம்எல்ஏ
மக்கள் கூடுவதால் தான் நெடுஞ்சாலையை மறித்து கூட்டம் போடுறோம் - அதிமுக எம்எல்ஏ

மக்கள் கூடுவதால் தான் தேசிய நெடுஞ்சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்துவதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்று இந்தக் கூட்டத்திற்காக, தேசிய நெடுஞ்சாலையை மறித்து மேடை போடப்பட்டது. இதனால் அப்பகுதி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டது. அப்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வழி இல்லமால் திணறியது. பின்னர் ஆம்புலன்ஸும் வழியின்றி, சுற்றிக்கொண்டு மாற்றுப்பாதையில் சென்றது. 

தேசிய நெடுஞ்சாலையில் மேடை போட்டு பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக, மேடையில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ‘நான்கு வழிச்சாலையில தைரியமா மேடை போட்டிருக்கின்றோம். மக்கள் தைரியமாக கூடுகிறார்கள் அதான் மேடை போட்டிருக்கின்றோம். வேணுமென்றே மேடை போடவில்லை’ என்று கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com