“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” ஓபிஎஸ் ட்வீட்

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” ஓபிஎஸ் ட்வீட்
“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” ஓபிஎஸ் ட்வீட்

3வது முறையாக 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற பேச்சுகள் எழுந்து வருகின்றன. அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் என அமைச்சர்களும் இதற்கு பதிலளித்து வந்த நிலையில், இன்று அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், “தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” என்று எம்.ஜி.ஆர் பாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com