அதிமுக பிரச்சாரக் குழு பொறுப்பாளராக வைகை செல்வன் நியமனம்

அதிமுக பிரச்சாரக் குழு பொறுப்பாளராக வைகை செல்வன் நியமனம்

அதிமுக பிரச்சாரக் குழு பொறுப்பாளராக வைகை செல்வன் நியமனம்
Published on

இடைத்தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக அதிமுக சார்பில் வைகைசெல்வனை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை எனவும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாகவும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். 

இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் உள்பட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதுகுறித்து 18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை எனவும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் எனவும் டிடிவி தரப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் எனவும் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், இடைத்தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக அதிமுக சார்பில் வைகைசெல்வனை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

இதனிடையே இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com