உறுதியானது அதிமுக கூட்டணி - பாஜகவிற்கு 5 தொகுதிகள்

உறுதியானது அதிமுக கூட்டணி - பாஜகவிற்கு 5 தொகுதிகள்

உறுதியானது அதிமுக கூட்டணி - பாஜகவிற்கு 5 தொகுதிகள்
Published on

சென்னை கிரவுன் பிளாசாவில் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று நடைபெற்றது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஷ் கோயலுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் பேச்சுவார்த்தையில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதராவ், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.  பிப்.14 ஆம் தேதி ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுகவுடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்தத் தகவலை உறுதி செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com