``எங்களுக்காக பிரார்த்தியுங்கள்..”-விபத்துக்குப்பின் நடிகை ரம்பாவின் உருக்கமான வேண்டுகோள்

``எங்களுக்காக பிரார்த்தியுங்கள்..”-விபத்துக்குப்பின் நடிகை ரம்பாவின் உருக்கமான வேண்டுகோள்
``எங்களுக்காக பிரார்த்தியுங்கள்..”-விபத்துக்குப்பின் நடிகை ரம்பாவின் உருக்கமான வேண்டுகோள்

நடிகை ரம்பா மற்றும் அவரது 3 குழந்தைகள் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ரம்பாவின் சாஷா என்ற மகள், காயமடைந்து தற்போதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து, `சாஷா விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்’ என ரம்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவர்களில் ரம்பாவும் அவரது மகள்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காரில் சென்றுகொண்டிருந்தபோது, வழியில் விபத்து ஏற்பட்டிருந்திருக்கிறது. இதில் ரம்பாவும் அவரது குழந்தைகளும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரம்பா தனது சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

அப்பதிவில், தனது ஒரு மகள் மட்டும் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிராத்தித்துக்கொள்ளும்படி நடிகை ரம்பா அனைவரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். காரில் இருந்த மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்ட போதிலும், அவர்கள் தற்போது டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாக தெரிகிறது.

இந்த விபத்தானது, ரம்பா தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விபத்து குறித்து ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தாங்கள் மிகப்பாதுக்கப்பாகவே காரில் சென்றுகொண்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். பாதுகாப்பாக சென்ற போதும், தங்களுக்கு சிறுசிறு காயம் ஏற்பட்டிருப்பதாக ரம்பா தெரிவித்துள்ளார். தனது அப்பதிவில் ரம்பா, “குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு காரில் அழைத்து வந்துக்கொண்டிருந்தேன். அப்போது வழியில் ஒரு சின்ன வழியில் எங்கள் கார், மற்ரொரு கார் மீது மோதிவிட்டது. காரில் என்னுடன் என் குழந்தைகளும், அவர்களின் பராமரிப்பாளிப்பாளரும் இருந்தனர். எல்லோருக்குமே சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். என்னுடைய குழந்தை சாஷா மட்டும், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார். மோசமான இந்த நாள்களில், மோசமான நேரமாக இது உள்ளது! எங்களுக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும், எங்களுக்கு மிகப்பெரிய விஷயம்” என்றுள்ளார்.

தனது இந்தப் பதிவுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் புகைப்படத்தையும், தனது சேதமடைந்த காரின் புகைப்படத்தையும் ரம்பா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com