ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கருநாகராஜன் போட்டியிடுகிறார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தீபாவும் போட்டியிடுகின்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவித்துள்ளன. இத்தேர்தலின் புதிய திருப்பமாக நடிகர் விஷால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நடிகர் விஷால் முறையாக டோக்கன் பெற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தனது சொத்துவிவரங்களை தெரிவித்திருந்தார். முன்னதாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்ய இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியமால் வந்ததும், காசிமேட்டில் இருந்து 300 ஆதரவாளர்களை அழைத்து வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com