விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: திருநாவுக்கரசர்

விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: திருநாவுக்கரசர்

விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: திருநாவுக்கரசர்
Published on

ஜெயலலிதாவின் படத்திறப்பு குறித்து கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் நேற்று  திறக்கப்பட்டது. சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்திருந்தாலும், அக்கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி, படத்திறப்புக்காக சபாநாயகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும்  புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயதரணி, தமிழகத்தில் பெண் தலைவர்களுக்கு இடமில்லையா?. பெண் தலைவரின் படம் ஏன் இடம்பெறக்கூடாது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ராகுல், திருநாவுக்கரசர் போன்றோர் சென்று பார்த்தனர். ஜெயலலிதா இறுதி அஞ்சலியில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது எல்லாம் அவர்களுக்கு ஜெயலலிதா குற்றவாளி என தெரியவில்லையா. என்னுடைய தனிப்பட்ட உரிமையை பறிக்க யாராலும் முடியாது. கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்து படத்திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. உருவப்பட திறப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்”என தெரிவித்தார்

இது குறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், “விஜயதரணி இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம். இரண்டு முறை எம்.எல்.ஏ ஆகியுள்ளார். தற்போது 2வது முறையாக எம்.எல்.ஏவாக உள்ளார். விஜயதரணி யோசித்து தான் பேசுகிறாரா இல்லை யோசிக்காமல் பேசுகிறாரா என தெரியவில்லை.இவை எல்லாம் எதிர்காலத்தில் என்ன நிகழ்வுகளை ஏற்படுத்தும் என தெரிந்துதான் இவ்வாறு செயல்படுகிறாரா?.விஜயதரணி பேசுவது முறையல்ல சரியல்ல. விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ”என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com