”ஆடு, கோழி, நாய்; இதான் எங்க குடும்பம்” - ஒரே பைக்கில் சென்ற 7 பேர்: ஏய் எப்புட்றா மொமண்ட்

”ஆடு, கோழி, நாய்; இதான் எங்க குடும்பம்” - ஒரே பைக்கில் சென்ற 7 பேர்: ஏய் எப்புட்றா மொமண்ட்
”ஆடு, கோழி, நாய்; இதான் எங்க குடும்பம்” - ஒரே பைக்கில் சென்ற 7 பேர்: ஏய் எப்புட்றா மொமண்ட்

விநோதமான, விசித்திரமான நிகழ்வுகளின் உறைவிடமாகவே இருக்கிறது சமூக வலைதளங்கள். அதுவும் சாலைகளில் நடக்கும் பல நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் பலவும் சோஷியல் மீடியாக்களில் பட்டையக் கிளப்ப தவறுவதில்லை. நாய்கள் வண்டி ஓட்டுவது, குதிரையை வைத்து சாகசம் செய்வது போன்ற பல வீடியோக்கள் உலாவுவது வாடிக்கை.

அந்த வகையில், இந்தியாவின் சாலையில் ஒரு பைக்கில் வண்டி ஓட்டுவரை தவிர 6 பேர் பயணித்ததோடு, அந்த பைக்கில் இரண்டு நாய்களும், ஒரு கோழியோடு சேர்த்து சில பல மூட்டைகளையும் பைக்கின் பக்கவாட்டில் மாட்டியும் சென்ற வீடியோதான் நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்திருக்கிறது.

இது தொடர்பான வீடியோவின் கேப்ஷனில், “டிராஃபிக் போலீசிடம் சிக்கினால், அபராதம் கட்டுவதற்கு என வங்கியில் கடன் தான் வாங்க வேண்டியிருக்கும் போல” என இந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கு மேலானோர் பார்த்திருக்கும் இந்த வீடியோவிற்கு எக்கச்சக்கமானோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

அதில், “இதை பார்த்தால் ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்ற சொற்றொடர் குறித்து அந்த தம்பதி அறிந்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது” என்று பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும், “ஒரு கொஞ்சம் ஊழியர்களை வைத்து எலான் மஸ்க் ட்விட்டரை நடத்துறாரே அது மாதிரியா?” என்று ட்வீட் போட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com