“எனது பேச்சில் என்ன தவறு என்பதை தெளிவாக கூறுங்கள்” - தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்

“எனது பேச்சில் என்ன தவறு என்பதை தெளிவாக கூறுங்கள்” - தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்

“எனது பேச்சில் என்ன தவறு என்பதை தெளிவாக கூறுங்கள்” - தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்
Published on

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் தான் எதுவும் பேசவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் திமுக எம்.பி ஆ.ராசா பரப்புரையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆ.ராசா அவரின் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆ.ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. இந்நிலையில் ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “உவமானம் என்ற முறையிலேயே மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசினேன். முதல்வர் கண்கலங்கியது அறிந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டது தெரியும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில் 3 கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார். அதாவது, “அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்துள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாக சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும். எனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள்” எனவும் கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com