கொடைக்கானல்: மேலும் பல இடங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்த வல்லுனர் குழு ஆய்வு...!

கொடைக்கானல்: மேலும் பல இடங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்த வல்லுனர் குழு ஆய்வு...!
கொடைக்கானல்: மேலும் பல இடங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்த வல்லுனர் குழு ஆய்வு...!

புதிய தலைமுறை செய்தி எதிரொலியால், கொடைக்கானலில் பிரபலமாகாத அருவிகளை சுற்றுலா தலமாக மேம்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என, சுற்றுலாத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலைப்பகுதிகளில் இருக்கும் பார்த்த இடங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கும் நிலையை மாற்றி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு அருவிகள், ஆதிமனிதன் குகைவாழ் இடங்கள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பட்டியலில் சேர்த்து, அங்கு செல்ல தேவையான பாதைகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என, புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை வல்லுனர் ஆய்வுக்குழு ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அதில் பேத்துப்பாறை ஆதிமனிதன் குகைகள், அஞ்சுவீடு அருவி, பாரதி அண்ணாநகர் ஓராவி அருவி, பள்ளங்கி கொட்டிவரை அருவி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்பு அந்த பகுதிகளுக்கு செல்ல பாதைகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என, உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் தலைமையில் ஆய்வுகள் செய்தனர். மேலும் ஆய்வுப்பணி மேல்மலைப்பகுதிகளில் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com