பாலியல்வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்குகுழந்தை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

பாலியல்வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்குகுழந்தை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
பாலியல்வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்குகுழந்தை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

தாரமங்கலம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் இரண்டு வாலிபர்களை பிடித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் நகர்பகுதியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்த நகரை சேர்ந்த 15வயது சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால், பெற்றோர்கள் அவரை தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கடந்த11-ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் உறவினர்களான இரண்டு வாலிபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனாலேயே சிறுமி கர்ப்பமடைந்து தற்போது குழந்தை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினர்களான சரண்குமார், சண்முகராஜ் ஆகிய இருவரிடம் தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாரமங்கலத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com