காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்பு : தூத்துக்குடியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் !

காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்பு : தூத்துக்குடியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் !
காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்பு : தூத்துக்குடியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் !

தூத்துக்குடியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கல்வலையில் உள்ள காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்டக்கப்பட்டுள்ளார். கடைக்குச் செல்வதாக சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com