கர்நாடக அமைச்சர் வீடுகளில் 4ஆவது நாளாக தொடரும் சோதனை

கர்நாடக அமைச்சர் வீடுகளில் 4ஆவது நாளாக தொடரும் சோதனை

கர்நாடக அமைச்சர் வீடுகளில் 4ஆவது நாளாக தொடரும் சோதனை
Published on

கர்நாடகா அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவக்குமார் மீதான வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக பெங்களூருவில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் சோதனை நடந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் விடுதியில் அமைச்சர் சிவக்குமார் தங்கியிருந்த அறையில் மட்டுமே சோதனை நடைபெற்றதாகவும் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் 4ஆவது நாளாக அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி இல்லம் மற்றும் கர்நாடகாவில் உள்ள இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நீடிக்கிறது. இதுவரை 15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com