சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையம்

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையம்
சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையம்

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், சென்னையில் இரண்டாயிரத்து 157 துணை வாக்குச்சாவடிகள் உள்பட 5,911 வாக்குச்சாவடிக்ள் உள்ளன என்றும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 30000 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இதுவரை சென்னையில் மட்டும் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 5,8,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் இதர விளம்பரங்கள் என 39,502 இடங்கள் அழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சி விஜில் ஆப் மூலம் 25 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளதாவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com