4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,
திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி
ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா
சூலூர் - வெ.விஜயராகவன்
அரவக்குறிச்சி - பா.க.செல்வம்
ஆகியோர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.