நான்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

நான்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
நான்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி

ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா 

சூலூர் - வெ.விஜயராகவன் 

அரவக்குறிச்சி - பா.க.செல்வம்

ஆகியோர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com