பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அதிவேக கார் பயணம் : 4 இளைஞர்கள் பலி

பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அதிவேக கார் பயணம் : 4 இளைஞர்கள் பலி
பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அதிவேக கார் பயணம் : 4 இளைஞர்கள் பலி

கோவையில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அதிவேகமாக காரில் சென்று விபத்து ஏற்பட்டதில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சக நண்பர்கள் ஐந்து பேர், இரவு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அதிகாலை ஆனைக்கட்டி பகுதியை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த இந்திரேஷ் என்பவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆனைக்கட்டி சாலையில், காளையனூர் எனும் பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய இந்திரேஷ், காரில் இருந்த பூமார்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜூ, வடவள்ளி பகுதியை சேர்ந்த மோகன் ஹரி , வடகோவை பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பிரஜேஷ் என்ற இளைஞர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com