மதுரையில் இன்று ஒரேநாளில் இதுவரை 310 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் இன்று ஒரேநாளில் இதுவரை 310 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரையில் இன்று ஒரேநாளில் இதுவரை 310 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை 310 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு சற்று குறைவாக காணப்பட்ட நிலையில், தற்போது அங்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5057 ஆக இருந்த நிலையில், தற்போது அது 5,367 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,160 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 3,811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் இதுவரை 86 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையை போன்று மதுரை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com