உத்தவ் தாக்கரே பண்ணை வீட்டில் அத்துமீறல் ? - சட்டவிரோத காவலில் செய்தியாளர் உட்பட மூவர்?

உத்தவ் தாக்கரே பண்ணை வீட்டில் அத்துமீறல் ? - சட்டவிரோத காவலில் செய்தியாளர் உட்பட மூவர்?
உத்தவ் தாக்கரே பண்ணை வீட்டில் அத்துமீறல் ? - சட்டவிரோத காவலில் செய்தியாளர் உட்பட மூவர்?

மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டில் அத்துமீற முயன்றதாக செய்தியாளர் உட்பட 3 வரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர் அனூஜ் குமார், ஒரு கேமரா மேன் மற்றும் கால் டாக்ஸி டிரைவர் என மூவர் நேற்றிரவு ராய்காட்டில் உள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை அருகே சென்றதாக கூறப்படுகிறது. அங்கே பணியிலிருந்த காவலரிடம் பண்ணை வீட்டிற்கு செல்ல அவர்கள் வழிகேட்டதாக தெரிகிறது. அப்போது அவர் கூறிய வழியில் அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

அதற்குள் அந்த காவலர் பணியிலிருந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அந்த மூவரும் காரில் திரும்பி வந்து தவறாக வழி கூறியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களை சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் 3 பேர் மீதும் விதிமீறலில் ஈடுபட்டதாக, 4 நாட்கள் காவலில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com