ராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம்

ராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம்
ராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம்

கேரளாவில் நடைபெற்ற ராகுல் காந்தி பேரணியில் தடுப்பு கட்டைகள் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 3 பத்திரிகையாளர்கள் காயமைடந்துள்ளனர்.

கேரளாவிலுள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பிரியங்கா காந்தி, உம்மண் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் பலர் உடனிருந்தனர். அதன்பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து பேரணியான வேனில் நின்றபடி சென்றார். 

இந்நிலையில் அந்தப் பேரணியின் போது பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த தடுப்பணைகள் உடைபட்டு விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பத்திரிகையாளர்களுக்கு ராகுல் காந்தி உதவினார். அத்துடன் அவர்களை ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். 

முன்னதாக ராகுல் காந்தி வருகையால் கேரளாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் ராகுலின் பேரணிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அதிகளவில் திரண்டந்தால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com