29ம் தேதி டிடிவி அணியின் வேட்பாளர் அறிவிப்பு: தங்கத் தமிழ்ச்செல்வன்

29ம் தேதி டிடிவி அணியின் வேட்பாளர் அறிவிப்பு: தங்கத் தமிழ்ச்செல்வன்
29ம் தேதி டிடிவி அணியின் வேட்பாளர் அறிவிப்பு: தங்கத் தமிழ்ச்செல்வன்

டிடிவி தினகரன் அணியின் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் வரும் 29ம் தேதி அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

சென்னையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சியின் பொதுச்செயலாளரை பற்றியோ, மற்ற விசயங்களைப் பற்றியோ தேர்தல் ஆணையம் எதுவுமே பேசவில்லை. அதனால் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான். நாங்கள் பிரிந்துள்ளதால், எங்கள் கட்சியின் சார்பாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிக்க கூடிய சூழல் வந்துள்ளது. வருகிற 29 ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆலோசனைப்படி கட்சியில் ஆட்சி மன்றக்குழு கூட்டம் கூட உள்ளது, அந்த கூட்டத்தின் முடிவில் எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com