மதுரை, சேலம், ராமநாதபுரம் : மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா..!

மதுரை, சேலம், ராமநாதபுரம் : மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா..!
மதுரை, சேலம், ராமநாதபுரம் : மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா..!

மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 297 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 31,521 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 2,852 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,926 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 39,856 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 63 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,533 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

மதுரையில் இன்றும் மட்டும் 297 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதுவரை அங்கு 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் இன்றும் மட்டும் 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், இதுவரை அங்கு 5,648 பேர் பாதிப்படைந்துள்ளனர். சேலத்தில் இன்று 178 பேருக்கும், திருவள்ளூரில் இன்று 147 பேருக்கும், ராமநாதபுரத்தில் 111 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற மாவட்டங்களின் நிலவரத்தை காணலாம்.

அரியலூர் - 1, கோவை - 23, கடலூர் - 8, தருமபுரி - 5, திண்டுக்கல் - 35, ஈரோடு - 19, கள்ளக்குறிச்சி - 28, காஞ்சிபுரம் - 86, கன்னியாகுமரி - 33, கரூர் - 4, கிருஷ்ணகிரி - 6, நாகை - 9, நாமக்கல் - 3, நீலகிரி - 18, புதுக்கோட்டை - 30, ராணிப்பேட்டை - 8, சிவகங்கை - 30, தென்காசி - 21, தஞ்சை - 7, தேனி - 33, திருப்பத்தூர் - 17, திருவண்ணாமலை - 42, திருவாரூர் - 13, தூத்துக்குடி - 15, நெல்லை - 33, திருப்பூர் - 10, திருச்சி - 31, வேலூர் - 77, விழுப்புரம் - 27, விருதுநகர் - 45 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர வெளிநாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 13, உள்நாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் ரயில் மூலம் வந்து கண்காணிப்பில் உள்ளவர்கள் 4 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com